
ஜூலை 4 - நினைவு நாள்
* குறிப்பிட்ட நேரத்தில் ஒரு செயலை செய்தாலும், அதில் முழுமையாக ஈடுபட்டால் வெற்றி நிச்சயம்.
* அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்தும் முன் யோசி.
* யாருடைய குறையையும் பெரிதுபடுத்தாதே. மன அமைதி கிடைக்கும்.
* உனக்கு தேவையான வலிமை உன்னிடமே உள்ளது.
* நீண்ட துாரம் ஓடினால் மட்டுமே அதிக உயரம் தாண்டமுடியும். இது வாழ்க்கைக்கும் பொருந்தும்.
* நல்ல எண்ணங்களை வைத்து மனதை தினமும் சுத்தப்படுத்து.
* பொய் சொல்லி தப்பிக்க நினைக்காதே. உண்மையைச் சொல்லி மாட்டிக்கொள். ஏனெனில் பொய் வாழவிடாது.
உண்மை சாகவிடாது.
* தனக்குத்தானே அமைத்துக்கொள்ளும் விதிகளைத் தவிர, வேறு எதற்கும் மனிதன் கட்டுப்பட்டவன் அல்ல.
* பிறர் முதுகுக்குப் பின்னால் நீ செய்ய வேண்டியது, தட்டிக்கொடுப்பது மட்டும்தான்.
* எதை நினைக்கிறாயோ அதுவாகவே நீ மாறுவாய். மனதின் ஆற்றல் அளப்பரியது.
* உனக்கென ஒரு லட்சியத்தை தேர்ந்தெடு. அதை அடைய முயற்சி செய்.
* தீமையிலிருந்தும் பல பாடங்களை மனிதன் கற்கிறான்.
* அன்பின் மூலம் செய்யப்படும் செயல் மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
* உண்மைக்காக எதையும் துறக்கலாம். ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்காதே.
* நீ செய்யும் செயலை வைத்தே எதிர்காலம் அமைகிறது.
* உடலையும், மனதையும் நல்லபடியாக வைத்துக்கொள்.
சொல்கிறார் விவேகானந்தர்

