
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நவ.17 ஸ்ரீ அன்னை நினைவு நாள்
* வெற்றியாளராக திகழ விரும்பினால், வீண் பேச்சை தவிர்த்து, ஒருமுக சிந்தனையுடன் பணியில் ஈடுபடுங்கள்.
* ஒவ்வொரு நேர்மையான செயலுக்கும் உரிய பரிசு அந்த செயலுக்குள்ளேயே இருக்கும்.
* தவறான வேலை என்று எதுவும் கிடையாது. தவறான மனிதர்கள் மட்டுமே இருக்கிறார்கள்.
* நிறை, குறைகள் இயல்பானதே. எனவே, பிறருடைய குறைகளை பேசி, நம் நிலையை குறைத்து கொள்ள வேண்டாம்.
* தற்புகழ்ச்சி தவிர்த்து விடுங்கள். இல்லையேல் அது நம் முன்னேற்றத்தை தடுத்து விடும்.
* வெற்றி கிடைக்கும் என முழுமையாக நம்புவதே, வெற்றியை நோக்கி எடுத்து வைக்கும் முதல் அடி.
* நம்மைபிறருக்கு அர்ப்பணிப்பதில் சுயநலம் வேண்டாம். உண்மையான ஆன்மிகம் என்பது அதில் தான் இருக்கிறது. தனியாக யாரும் இருக்க முடியாது, ஏனெனில் நம் அனைவரிடமும் கடவுள் இருக்கிறார்.
வாழ்த்துகிறார் ஸ்ரீஅன்னை