sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

நல்லவர் இல்லம் ஒரு பல்கலைக்கழகம் அது நடமாடும் தெய்வங்கள் கூடும் சங்கம்

/

நல்லவர் இல்லம் ஒரு பல்கலைக்கழகம் அது நடமாடும் தெய்வங்கள் கூடும் சங்கம்

நல்லவர் இல்லம் ஒரு பல்கலைக்கழகம் அது நடமாடும் தெய்வங்கள் கூடும் சங்கம்

நல்லவர் இல்லம் ஒரு பல்கலைக்கழகம் அது நடமாடும் தெய்வங்கள் கூடும் சங்கம்


ADDED : பிப் 09, 2018 12:03 PM

Google News

ADDED : பிப் 09, 2018 12:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* சந்தனக்கட்டை மணம் பரப்புவது போல, நற்குணம் கொண்டவர்கள் வாழும் குடும்பம், கோயிலுக்கு நிகராக மதிக்கப்படும்.

* சத்தியம், நியாயம், விவேகம் ஆகிய மூன்றையும் மூச்சாக கொண்டவரிடம் சாந்தி, சக்தி, சந்தோஷம் தானாக உயரும்.

* ஆன்மிகம் இருந்தால், வாழ்க்கையில் லட்சியத்தை அடைய முடியும்.

* கொள்கைக்காக உயிரையும் தியாகம் செய்ய தயாராகுங்கள். அப்பொழுது தான் ஆன்மிகத்தில் வெற்றியடைய முடியும்.

* கருணையே உயர்வான குணம். குற்றத்தை மன்னிப்பதே மகத்தான சக்தி. ஆன்மிகமே மேலான செல்வம்.

* மனதில் அமைதி இருந்தால், எப்பொழுதும் ஆனந்தம் இருக்கும்.

* பணிவும், எளிய வாழ்க்கையும் கொண்ட தெய்வங்களுள் ஒருவராக மாறுவதை உணரலாம்.

* செயலும் அதற்கான விளைவும் சமமாகவும் எதிராகவும் இருக்கின்றன. எனவே யாருக்கும் தீங்கு செய்யாதீர்கள்.

* உலகமாகிய கடலை தாண்டிச் செல்ல இரண்டே வழிகள் உள்ளன. ஒன்று நல்லவர் நட்பு, மற்றொன்று நல்ல நுால்கள்.

* உணர்ச்சிகளுக்கு நீங்கள் வசமாகாமல், அவற்றை உங்கள் வசமாக்குங்கள்.

* உங்களை எந்த நிலையில் கடவுள் வைத்திருந்தாலும் கவலைப்படாதீர்கள். அவரை குறை கூறாதீர்கள். உங்களை அறிந்தவர் அவர் ஒருவரே.

* ஆன்மிக வாழ்விற்கு அடிப்படை அஞ்சாமை. ஆபத்து காலத்தில் அதுவே துணை.

* மனத்துாய்மை எவ்வளவு வேகமாக அதிகரிக்கிறதோ, அவ்வளவு வேகமாக நீங்கள் கடவுளை அடைவீர்கள்.

* இரக்கம், தன்னடக்கம், வாய்மை, நேர்மை, துாய்மை, கற்புடைமை, தவம் ஆகியவை ஆன்மிக வாழ்வின் முதுகெலும்பாகும்.

* உலகத்தை உங்கள் குடும்பமாக கருதி, வருமானத்தில் பத்து சதவீதம் வரை தர்மம் செய்யுங்கள்.

* பெயர், புகழ், பணம் எனும் ஆசைகளை விட்டால் உண்மையான அன்பை உணர முடியும்.

பாராட்டுகிறார் சிவானந்தர்






      Dinamalar
      Follow us