sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

பக்தி எண்ணங்கள் வளரும் நாளே உண்மையான பிறந்த நாள்

/

பக்தி எண்ணங்கள் வளரும் நாளே உண்மையான பிறந்த நாள்

பக்தி எண்ணங்கள் வளரும் நாளே உண்மையான பிறந்த நாள்

பக்தி எண்ணங்கள் வளரும் நாளே உண்மையான பிறந்த நாள்


ADDED : நவ 19, 2012 12:51 PM

Google News

ADDED : நவ 19, 2012 12:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நவ.23 சாய்பாபா பிறந்த நாள்

* உங்களது மனதில் பக்திப்பூர்வமான எண்ணங்கள் வளரும் நாளே, எனது உண்மையான பிறந்த நாள்.

* துன்பங்களை சந்தித்தவர்களால் மட்டுமே, பிறரது துன்பங்களை அறிந்து கொண்டு, அவர்கள் மீது கருணை செலுத்த முடியும்.

* சமுதாயத்திற்கு செய்யப்படும் தீங்கு, நாட்டையும் பாதிக்கும். நாட்டின் நலன், சமுதாயத்தை முன்னிறுத்தியே இருக்கிறது.

* கடவுள் மீது பக்தி கொண்ட உலகம், பக்தி செலுத்தாத உலகத்திலிருந்து வெகு தொலைவில் இருக்கிறது.

* யாருக்கும் தெரியாமல் ரகசியமாக பேசுவதைவிட, உரக்கப்பேசுவதே மேலானது (கருத்துக்களை வெளிப்படையாகப் பேசுவதே உயர்ந்தது).

* மனிதர்கள் மற்றும் நாடுகளுக்கிடையே சிறந்த நட்புறவை வளர்க்கும்படியாக அறிவியல் வளர்ச்சி பெற வேண்டும்.

* ஓய்வும், தூக்கமும் மனிதர்களுக்கு அவசியம். ஆனால், அவற்றையும் அளவாகவே வைத்துக்கொள்ள வேண்டும்.

* மகிழ்ச்சி துன்பங்களை போக்கும் மாமருந்தாக இருக்கிறது.

* மனம் எப்போதும் அறிவைச் சார்ந்திருப்பதில்லை. அறிவுதான் மனதைச் சார்ந்திருக்கிறது.

* பால், பழம், விதைகள் போன்ற உணவைச் சாப்பிடுங்கள். அவை நல்ல சிந்தனைகளைத் தரும்.

* எப்போதும் இறைவனைச் சார்ந்து, அவரைப் பற்றியே எண்ணிக்கொண்டிருங்கள். அதுவே மிகப்பெரிய தியானமாகும்.

* சேவை செய்வதை ஒரு வீடாகக் கருதினால் அதன் சுற்றுச்சுவராக உதவியும், மேற்கூரையாக தெய்வத்தன்மையும், வீட்டு உரிமையாளராக ஞானமும் இருக்கின்றன. இதற்கெல்லாம் அடித்தளமாக மனம் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவ்வீட்டினால் பயன் ஏதுமில்லை.

* விருப்பங்களின் தொகுப்பே மனம். ஆனால், விருப்பமில்லாத மனம்தான் சுத்தமாக இருக்கும்.

* இறைவன், ஒவ்வொருவரிடமும் அமைதியின் மூலமாகவே பேசிக்கொள்கிறார். ஆகவே, அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள்.

* கடுமையாக உழைப்பவர்களுக்கு அதற்கேற்ப பலன் கிடைக்கும்.

* அன்பிற்கு மொழி கிடையாது. மொழிகள் புரியாத இடத்தில் அன்பினால் அனைத்தையும் சாதிக்கலாம்.

* இறைவன், உடலுக்கு சக்தி தரும் ஊட்டச்சத்தைப்போல இருக்கிறார்.

* மனப்பூர்வமான பக்தியினால், இறைநிலையை யாராலும் அடைய முடியும். இதில் ஆண், பெண் என்ற பேதம் கிடையாது.

* இல்லாதவர்களுக்கு உதவி செய்வதே, மிகச்சிறந்த நற்செயலாகும்.

சொல்கிறார் சாய்பாபா






      Dinamalar
      Follow us