sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

அன்பின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளம்

/

அன்பின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளம்

அன்பின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளம்

அன்பின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளம்


ADDED : ஜூன் 14, 2018 10:59 AM

Google News

ADDED : ஜூன் 14, 2018 10:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உள்ளத்தில் அன்பு இல்லாமல் இன்பம் உண்டாகாது. அன்பே வாழ்வின் ஆதார சக்தி.

* கடவுள் என்னும் ஒன்று மட்டுமே உண்மை. உயிர்கள் எல்லாம் அதன் பிம்பங்களே.

* கவலை, பயத்திற்கு இரையாக வேண்டாம். தெய்வத்தை நம்பி உழைப்பில் ஈடுபடுங்கள்.

* அறிவிலும், செயலிலும் தெய்வத் தன்மையை வெளிப்படுத்தும் முயற்சியில் மனிதன் ஈடுபட வேண்டும்.

* உலகம் வியக்கும் விதத்தில் நன்மை கைகூட விரும்பினால், அதற்கு பக்தி ஒன்றே வழி.

* எல்லா சாஸ்திரங்களும் ஒரே உண்மையைத் தான் சொல்கின்றன. ஆனால் அனைவருக்கும் ஒரே சாஸ்திரம் பொருந்தாது.

* தியானப்பயிற்சியால் மனதில் நல்ல சிந்தனை படிப்படியாக வளரும்.

* தியானத்தின் சக்தியை எளிதாக நினைக்க வேண்டாம். மனதை விரும்பியபடி மாற்றும் வலிமை அதற்குண்டு.

* அன்பை விட சிறந்த குணம் வேறில்லை. அன்புள்ளம் அனைவரையும் அரவணைத்து மகிழும்.

* தர்மம் என்னும் ஒன்றை தவிர மற்ற உலக விஷயம் அத்தனையும் பொய்யானதே.

* நன்மை இதுவென்று அறிந்தும் கூட, தீமையை உதறும் வலிமையின்றி மனிதன் தத்தளிக்கிறான்.

* உங்களை நீங்களே திருத்திக் கொள்வதில் தயக்கம் கொள்ளக் கூடாது.

* ஊர் வாயை மூடும் உலை மூடி ஒன்று இருக்கிறது. அதன் பெயர் காலம்.

* நீதி வழியில் மக்களை வாழச் செய்யும் கடமை அரசாங்கத்திற்கு இருக்கிறது.

* உள்ளத்தில் நேர்மை, தைரியம் இருந்தால் செல்லும் பாதை நேரானதாக இருக்கும்.

* ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது. நடைமுறைக்கு பொருந்தாததை விட்டு அறிவுக்கு முன்னுரிமை தர வேண்டும்.

* எப்போதும் பாடுபடு. உழைத்து வாழ்வதில் தான் சுகமிருக்கிறது. உழைக்கும் இடத்தில் வறுமை, நோய்க்கு இடமிருக்காது.

* தனக்கும், பிறருக்கும் துன்பம் தருவது பாவம். தனக்கும், பிறருக்கும் இன்பம் தருவது புண்ணியம்.

* மனதால் பிறருக்கு தீங்கு நினைத்தாலும் குற்றமே. அதற்குரிய தண்டனையையும் அனுபவிக்க நேரிடும்.

* எங்கும், எப்போதும் மனிதன் நேர்மையை பின்பற்றி வாழ வேண்டும்.

* அணுவளவும் பிறரை ஏமாற்றுவதில்லை என்னும் உறுதி இருந்தால் மனிதன் கடவுளுக்கு நிகராவான்.

* எந்த செயலுக்கும் காலம் ஒத்து நின்றால் ஒழிய அதனை நிறைவேற்றும் சக்தி மனிதனுக்கு கிடையாது.

* எல்லா நன்மைக்கும் தாயாக இருப்பது துணிவு. கல்வி, செல்வம், வீரம் அனைத்தும் துணிவால் பெற முடியும்.

* படிப்படியான வளர்ச்சி என்றும் நிலைத்திருக்கும். வேகமான வளர்ச்சி, சென்ற வேகத்தில் கீழே தள்ளி விடும்.

* பணக்காரன் சமத்துவ எண்ணத்துடன் இருந்தால் உலகமே சீர் பெறும்.

* உண்மையை உயிராக மதித்துப் போற்று. உண்மையான வாக்கே அருள் வாக்கு என்று சொல்லப்படும்.

பண்படுத்துகிறார் பாரதியார்






      Dinamalar
      Follow us