/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
பெற்ற தாயும் பாரத அன்னையும் ஒன்றே!
/
பெற்ற தாயும் பாரத அன்னையும் ஒன்றே!
ADDED : நவ 27, 2019 12:04 PM

டிச.5 - அரவிந்தர் நினைவு நாள்
* பெற்ற தாயும், பாரத அன்னையும் ஒன்றே. அவளை போற்றிக் காப்பது நம் கடமை.
* தீமையை எதிர்க்காமல் இருக்காதே. அதைத் தடுத்து தர்மத்தைக் காக்க வீரமுடன் எழுந்திரு.
* மங்களமானவர் கடவுள். அவர் செய்யும் தீமையிலும் கூட நன்மை நிச்சயம் இருக்கும்.
* கடவுளின் ஆற்றலுக்கு எல்லை இல்லை. அதை மறந்து தெய்வீக அறிவில் குறை காண்பது நல்லதல்ல.
* அருட்சக்தி ஒரு போதும் கண்மூடித்தனமாக வேலை செய்வதில்லை. அது ஒருபோதும் வீணாவதில்லை.
* கண்களில் பயமின்மை, கபடமற்ற குணம் இருக்கட்டும். பேச்சிலும் ஆவேசம் தவிர்த்து இனிமை கலக்கட்டும்.
* கவலையற்ற சிரிப்பு, அஞ்சாத நெஞ்சம், சந்தோஷ மனப்பான்மை, நன்னம்பிக்கை கொண்டவனாக எப்போதும் இரு.
* சுகத்தை மட்டுமே விரும்புவதால் துக்கத்தை கண்டு அஞ்சுகிறாய். அதனால் அடுத்தவரை அண்டிப் பிழைக்கும் நிலை உருவாகிறது.
* 'நான்' என்ற அகந்தை எப்படி வந்தாலும் களைவது நல்லது.
* பராசக்தியிடம் உன்னை ஒரு கருவியாக்கு. அவளின்றி உன்னால் எதுவும் செய்ய முடியாது.
* பராசக்தியை வழிபடு. எல்லாச் செயல்களையும் விரைவாகவும், உறுதியாகவும் நிறைவேற்றி வைப்பாள்.
* உலகை வழிநடத்தும் சர்வஞானி கடவுள்.
* மனிதர்களை நேசிப்பதோடு சேவை செய்வதில் மகிழ்ச்சி கொள். ஆனால் பாராட்டை எதிர்பார்க்காதே.
* கடவுளின் பணியாளனாக இருப்பது மதிப்பு மிக்கது. அவருக்கு அடிமையாக இருக்க விரும்பாதே.
சொல்கிறார் அரவிந்தர்