sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

வெறும் பாத்திரம் உள்ளது என்னிடத்தில்... அதன் சூத்திரமோ... அது உன் இடத்தில்!

/

வெறும் பாத்திரம் உள்ளது என்னிடத்தில்... அதன் சூத்திரமோ... அது உன் இடத்தில்!

வெறும் பாத்திரம் உள்ளது என்னிடத்தில்... அதன் சூத்திரமோ... அது உன் இடத்தில்!

வெறும் பாத்திரம் உள்ளது என்னிடத்தில்... அதன் சூத்திரமோ... அது உன் இடத்தில்!


ADDED : மார் 23, 2018 09:51 AM

Google News

ADDED : மார் 23, 2018 09:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கடவுளை அறிவது ஒன்றே வாழ்வின் நோக்கம். உடம்பு என்னும் பாத்திரம் அதற்காகவே அளிக்கப்பட்டிருக்கிறது. அதை இயக்கும் சூத்திரதாரியும் அவரே.

* அறிவால் கடவுளை அடைய முடியாது. அவர் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவராக இருக்கிறார்.

* கடவுளை தேடி அலைய வேண்டாம். எல்லா உயிர்களிலும் அவர் நிறைந்திருக்கிறார்.

* பொறுமை, நம்பிக்கை என்னும் இரு காணிக்கைகளை மட்டுமே கடவுள் நம்மிடம் எதிர்பார்க்கிறார்.

* கடவுள் மீது முழு கவனம் செலுத்துபவருக்கு துன்பத்தில் இருந்து முற்றிலும் விடுதலை கிடைக்கும்.

* உலகில் ரகசியம் என எதுவும் கிடையாது. அனைத்தையும் அறிபவராக கடவுள் இருக்கிறார்.

* ஆணவம் சிறிதும் இல்லாமல் கடவுளின் வேலைக்காரன் என்னும் எண்ணத்துடன் சேவை செய்யுங்கள்.

* எளிமையாக வாழ விரும்புங்கள். கவுரவத்திற்காக ஆடம்பர செலவுகளில் ஈடுபடாதீர்கள்.

* உலகம் என்ன நினைக்கிறது என கவலைப்பட வேண்டாம். உள்ளம் என்ன நினைக்கிறது என்பதே முக்கியம். எப்போதும் அதில் உயர்வான எண்ணம் மட்டுமே உதிக்க வேண்டும்.

* எதிரி பத்து வார்த்தை பேசினால் பதிலுக்கு நீங்கள் ஒரு வார்த்தை பேசுங்கள்.

* உண்மை எது, உண்மையற்றது எது என்பதை அறிந்து செயல்படுவதே விவேகம்.

* குழந்தைகளையும், பெண்களையும் அன்புடன் நடத்துங்கள். அவர்களைகஷ்டப்படுத்தி பாவத்திற்கு ஆளாகாதீர்கள்.

* உடம்பை புறக்கணிக்க வேண்டாம். அதே நேரம் அளவுக்கு அதிகமாக பராமரிக்கவும் வேண்டாம்.

* வழிபாட்டுக்கு ஆடம்பரம் தேவையில்லை. பணிவும், அன்பும் நிறைந்த மனம் ஒன்றே போதுமானது.

* முன்னேற வேண்டுமானால், சாஸ்திரங்களில் தேர்ச்சி பெறவோ, உடலை வருத்தி விரதம் இருக்கவோ வேண்டாம். கடவுளை நம்பினால் போதும்.

சொல்கிறார் ஷீரடி மகான்






      Dinamalar
      Follow us