ADDED : ஜூலை 20, 2018 03:10 PM

* வாழ்க்கை ஆனந்தமாக செல்ல பக்தி எனும் தண்ணீரில் பயணம் செய்யுங்கள்.
* உடன் இருப்பவர் யாருடனும் சேர்ந்து வாழ முடியவில்லை என்றால், நம்மிடம் ஏதோ குறை இருக்கிறது என்று அர்த்தம். உடனே அதை சரி செய்வது அவசியம்.
* நாம் செய்யும் பிழைகளை திருத்திக் கொள்ளாவிட்டால் அந்த பிழைகள் தொல்லை தரும்.
* தவத்தால் உடல் துாய்மையும், வேதத்தால் வாக்கு துாய்மையும், பக்தியால் உள்ள துாய்மையும் உண்டாகும். அந்நிலையில் தானாகவே ஆத்மா துாய்மை பெறும்.
* பலமுள்ளவராக இருப்பதற்கு அடக்கமே சிறந்த வழி. அதுவே கடவுளை அடைய செய்யும் பிரம்மச்சரியம்.
* அவரவர் தேவைகளை அவர்களே பூர்த்தி செய்ய வேண்டும் என்பதே அடிப்படை கோட்பாடு.
* மரணம் பற்றி சிந்திக்கும் ஒவ்வொரு நொடியும் உங்கள் ஆயுள் குறைந்து கொண்டே இருக்கும்.
* பணிவுடன் நடந்தால் ஆபத்துகளை தவிர்க்க முடியும்.
* அஞ்சாமையே எல்லா நல்ல குணங்களுக்கும் ஆதாரம்.
* குறிக்கோளுக்காக வாழ்வை அர்ப்பணிப்பவர்களின் புகழே உலகில் நிலைக்கும்.
* வாழ்வில் உயரிய நோக்கமும், ஆர்வமும் இல்லாவிட்டால் ஒரு அடி கூட உன்னால் முன்னேற முடியாது.
வழிகாட்டுகிறார் வினோபாஜி