ADDED : ஆக 30, 2019 02:55 PM

செப்.5 ஆசிரியர் தினம்
* பகைவனை நண்பனாக மாற்றுதல், கெட்டவனையும் நல்லவனாக ஆக்குதல், கல்வி கற்பித்து மக்களின் வாழ்வை உயர்த்துதல். இவை மூன்றும் நமக்குரிய கடமைகள்.
* கல்வி என்பது மனித வாழ்வில் இரண்டாவது பிறப்பு போன்றதாகும்.
* மனிதத்தன்மை நிறைவு பெறும் நிலைக்கு மதம் என்று பெயர்.
* மதம் என்பது உள்ளுணர்வில் எழும் மாறுதல், மனதில் ஏற்படும் புரட்சி.
* அறிவுத்திறமையும், வாழ்க்கை சூழ்நிலை குறித்த தெளிவும் ஆசிரியருக்கு அவசியமானவை.
* புத்தகம் எழுதும் ஆசிரியருக்கு மனக்கட்டுப்பாடு, உணர்ச்சி வெளிப்பாடு இரண்டும் வேண்டும்.
* ஆரம்பப் பள்ளி முதல் கல்லுாரி வரை மாணவர்களுக்கு ஆன்மிகக் கல்வி கற்றுத் தர வேண்டும்.
* விஞ்ஞானம் இல்லாவிட்டால் மூடத்தனமும், ஆன்மிகம் இல்லாவிட்டால் ஆணவமும் ஏற்படும்.
* அறிவைத் தேடுவதோடு இதயப்பூர்வமாக கடவுளையும் மனிதன் தேட வேண்டும்.
* உணவுக்கு ஏற்ப மனிதனின் இயல்பு மாறுகிறது. நற்பண்பை உருவாக்குவதில் உணவின் பங்கு அதிகம்.
* அன்பு, சகிப்புத்தன்மை, பொறுமை இருக்க வேண்டுமே தவிர வெறுப்பு உணர்வு வெளிப்படக் கூடாது.
சொல்கிறார் ராதாகிருஷ்ணன்