sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

சம்பாதிக்க முடியாத பொருள்

/

சம்பாதிக்க முடியாத பொருள்

சம்பாதிக்க முடியாத பொருள்

சம்பாதிக்க முடியாத பொருள்


ADDED : நவ 28, 2017 04:02 PM

Google News

ADDED : நவ 28, 2017 04:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* இழந்த செல்வத்தை கூட சம்பாதித்து விட முடியும். ஆனால் இழந்து போன ஒரு நிமிட நேரத்தை சம்பாதிக்க முடியாது. காலம் பொன் போன்றது.

* கடல் அலைகளைக் கட்டுப்படுத்த கரை இருக்கிறது. அது போல மனதில் எழும் எண்ண அலைகளைக் கட்டுப்படுத்த விரதங்களை பெரியவர்கள் ஏற்படுத்தினர்.

* நம்பிக்கை இல்லாமல் வாழ்வில் வளர்ச்சி உண்டாகாது. விண்ணுலகில் இருக்கும் தெய்வத்தை நம்புவதை காட்டிலும் மனிதனுக்கு தன்னம்பிக்கை அவசியம்.

* உயிர்கள் மீது அன்பு செலுத்துங்கள். இதுவே உண்மையான வழிபாடு.

* இன்பம், துன்பம் எது வந்தாலும் கடவுளின் திருவடிகளை உறுதியாக பற்றிக் கொள்ளுங்கள்.

* அன்பு மிக்க கடவுளே, தீமையை களைய கோர வடிவிலும் காட்சியளிக்கிறார். இரண்யகசிபுவிடம் சீறிப் பாய்ந்த நரசிம்ம மூர்த்தியே, பக்த பிரகலாதனை கண்டதும் சாந்தம் அடைந்தார்.

* சுயநலமும் ஆணவமும் உள்ளவர்கள் கடவுளை நெருங்கவே முடியாது. எளிமையும், துாய்மையும் மிக்கவர்கள் மனம் ஒன்றி வழிபடும் போது கடவுளின் அருளுக்கு பாத்திரமாகி விடுவர்.

* எல்லாம் கடவுள் செயல் என்று கூறிக் கொண்டு சும்மா இருப்பவர்கள் சோம்பேறிகள். கடவுள் அளித்த அறிவு, செல்வத்தை பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும்.

விளக்குகிறார் அமிர்தானந்தமயி






      Dinamalar
      Follow us