sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

என்ன அழகு... எத்தனை அழகு!

/

என்ன அழகு... எத்தனை அழகு!

என்ன அழகு... எத்தனை அழகு!

என்ன அழகு... எத்தனை அழகு!


ADDED : ஜூன் 21, 2018 04:23 PM

Google News

ADDED : ஜூன் 21, 2018 04:23 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* அளவோடு உண்கிற பெண்களுக்கு அழகு நீடிக்கும்.

* துன்பம் வரும் போதும் மனம் தளராமல் ஊக்கத்துடன் செயல்பட்டால் வெல்வது உறுதி. துணிவு இருந்தால் கடலின் ஆழம் கூட தொடை அளவே.

* தாயும் தந்தையும் தான் நமக்கு முதல் கடவுள்.

* இல்லற வாழ்வே நல்லறமாகும். இல்லற வாழ்வை விட்டு விலகுவது பண்பாளர்களுக்கு ஏற்றதல்ல.

* பிறருக்கு கொடுத்து வாழாதவர் எவ்வளவு காலம் வாழ்ந்தாலும் அது அர்த்தமற்றதாகும்.

* பெற்றோரின் குறிப்பறிந்து செயல்படும் பிள்ளைகள் அமிர்தம் போன்றவர்கள்.

* பிச்சை எடுக்கும் அளவிற்கு வறுமை வந்தாலும், தவறான செயல்களில் ஈடுபட கூடாது.

* வேதம், ஞான நுால்களை படித்து விட்டு ஒழுக்கமில்லாமல் இருப்பவர்கள் பூமிக்கு பாரமானவர்கள்.

* நம்மை அழிக்கும் நோய் வெளியில் இல்லை, அது பொறாமை என்னும் பெயரில் நமக்குள்ளேயே இருக்கிறது.

* நல்ல சொற்களை மட்டுமே கேட்டு, நல்ல சொற்களை மட்டும் பேசி வாழ்வதே கற்பு.

* முயற்சி செய்தும் தனக்கு கிடைக்காத பொருளை உடனே மறந்து விட வேண்டும்.

* குற்றம் சொல்லிக் கொண்டே இருப்பவர்களுக்கு நண்பர், உறவினர்களின் ஆதரவு கிடைக்காது.

* எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும், தற்பெருமை பேசுதல் கூடாது. அது திறமையை அழித்துவிடும்.

* காற்றுடன் தீ சேர்ந்தால் அழிவு அதிகமாகும். அதுபோல கோள் சொல்பவனுடன் அதைக் கேட்பவனும் சேர்ந்தால் தீமை அதிகமாகும்.

* இன்பத்திலும் துன்பத்திலும் பிரியாது இருப்பதே உண்மையான உறவுக்கு அடித்தளம்.

* சூதாடுவதும், தேவையில்லாத வாக்குவாதமும் தீராத துன்பத்தை தரும்.

* கட்டிய கணவனையே பழிதுாற்றும் பெண் எமனுக்கு நிகராவாள்.

* பிறர்க்கு அடிமையாய் இருந்து உண்பதை விட உழைத்து உண்பதே சிறந்தது.

* நீரின்றி அமையாது உலகு என்பதால் நீர்வளம் உள்ள ஊரில் வாழ்தலே சிறப்பு.

* மிகச்சிறிய செயலாக இருந்தாலும் ஆராய்ந்து பார்த்து செய்வதே நல்லது.

* மனசாட்சியை புறக்கணிப்பதை விட பெரிய வஞ்சகம் வேறு ஒன்றுமில்லை.

* உருவத்தால் சிறியவர் என்று யாரையும் ஏளனமாக கருத கூடாது.

* அமிர்தமாகவே இருந்தாலும் பசித்த பின் உண்பது நல்லது.

* சிந்தித்து பொறுமையாக செயல்பட்டால் உலகம் உங்கள் கையில்.

* நன்மையோ, தீமையோ செயலின் விளைவு கட்டாயம் கிடைத்தே தீரும்.

* உழவுத்தொழிலின் மூலம் கிடைத்த செல்வம் என்றும் நிலைத்திருக்கும்.

* நாவடக்கத்துடன் அமைதி காப்பதே தவவாழ்வின் அடையாளம்.

* துாய வெள்ளை மனம் படைத்தவருக்கு தீய சிந்தனைகள் உண்டாவதில்லை.

பெண்களுக்கு அவ்வையார் 'டிப்ஸ்'






      Dinamalar
      Follow us