/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
அழகென்ன... அறிவென்ன...மனமென்ன...குணமென்ன...கோபம் வரலாமா ! - சாந்தப்படுத்துகிறார் சாந்தானந்தர்
/
அழகென்ன... அறிவென்ன...மனமென்ன...குணமென்ன...கோபம் வரலாமா ! - சாந்தப்படுத்துகிறார் சாந்தானந்தர்
அழகென்ன... அறிவென்ன...மனமென்ன...குணமென்ன...கோபம் வரலாமா ! - சாந்தப்படுத்துகிறார் சாந்தானந்தர்
அழகென்ன... அறிவென்ன...மனமென்ன...குணமென்ன...கோபம் வரலாமா ! - சாந்தப்படுத்துகிறார் சாந்தானந்தர்
ADDED : டிச 17, 2010 02:02 PM

* கடவுளை வழிபடுவதாக கூறி உன்னை நீயே ஏமாற்றிக் கொள்ளாதே. கடவுள் உன் ஆத்மாவாக உள்ளார். உண்மையான வழிபாடு கடவுளைத் தனது ஆத்மாவாக நம்பி உணர்ந்துக் கொள்வதாகும். அழிவற்ற, என்றைக்கும் மாறாத ஆத்மாவை என்று உணருகிறாயோ அன்று உனக்கு விடுதலை கிடைக்கும்.
* நீ கடலின் மேல்பரப்பில் உள்ள அலைகள். நான் கடலாக உள்ளேன். நான் இல்லையென்றால் அலையாகிய நீ எப்படி இருக்க முடியும். மனமாகிய அலைகளே, உன்னை நான் உலக அரங்கில் விளையாட விட்டுள்ளேன். கடல் இல்லாமல் அலைகள் இருக்க முடியாது.
* கடவுளுடன் இரண்டறக் கலந்துவிட வேண்டும் என்ற லட்சியத்தில் உண்மையான உறுதியான நம்பிக்கையும், உள்ளத்தூய்மையும் உனக்கு இருந்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.
* தனது கொள்கையில் உறுதியில்லாதவன் மனம் பச்சோந்திபோல் மாறிக் கொண்டேயிருக்கும். அறிவுடையவன் தனது நல்ல செயலிலும், கெட்ட செயலிலும் தனது கொள்கையில் உறுதியாக இருப்பான்.
* உண்மையான ஆத்மாவை அறிந்து அனுபவிக்க கடவுள் நல்ல உடம்பைக் கொடுத்துள்ளார். ஆன்மா அறிந்துக் கொண்டால் மற்றவை அனைத்தும் உனக்கு மறு பிறவிகளை உண்டாக்கும்.
* ஆன்மாவில் கடவுளைக் காண பிறந்துள்ளோம். கடவுளை வெளி உலகிலோ, புத்தகத்திலோ காணமுடியாது. கடவுளை ஆன்மாவாக காண வேண்டுமானால் உள்ளத்தூய்மை வேண்டும். இதற்காக தியானத்தை மேற்கொள்ள வேண்டும்.
* உன்னிடம் அழகு, அறிவு, குணம், மனம் எல்லாம் இருந்தாலும் கோபம், பொறாமை, வஞ்சனை,சூதுவாது ஆகியவையும் உள்ளன. இதனால் உனக்குள்ளிருக்கும் கடவுள் வெகு தூரத்தில் இருப்பது போன்ற பாவனையை உண்டாக்குகிறது.