
* ஆன்மிக தத்துவத்தை எளிமையாக புரிய வைப்பதே புராணத்தின் நோக்கம்.
* நாம் செய்யும் நல்வினைகள் நம்மை நல்வழிப்படுத்தும்.
* பண்புள்ளவர்கள் எங்கு இருந்தாலும் அமைதிக்கு வழிவகுப்பர்.
* மனம் என்னும் வீட்டில் இருந்தே கடவுள் நம்மை இயக்குகிறார்.
* எல்லா உயிர்களிடமும் கடவுளைக் காண்பதே உண்மை பக்தி.
* தினமும் செய்ய வேண்டிய அவசியக் கடமை தியானம்.
* தியானத்தால் மனம் பக்குவம் பெறும். வாழ்க்கை சீராகும்.
* வாழ்வில் நாம் எதை சந்திக்கப் போகிறோம் என்பதை மாற்ற முடியாது. அதுவே விதி.
* மனத் துாய்மையுடன் சிறுபூவை கொடுத்தாலும் கடவுள் ஏற்பார்.
* பண்பு இல்லாதவன் இருக்குமிடத்தில் மகிழ்ச்சி இருக்காது.
* கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் கடவுளின் அருளால் உலகம் இயங்குகிறது.
* மனிதன் செய்யும் சமூகத் தொண்டுகள் அளவில் சிறியவை.
* உலக நன்மைக்காக ஞானிகள் செய்யும் பிரார்த்தனை பலத்தில் பெரியவை.
* உண்மை, நேர்மை மிக்கவர்கள் வாழ்வில் உயர்வர்.
* வாழ்வை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்பது அவரவர் கையில் உள்ளது.
விளக்குகிறார் சின்மயானந்தர்