
* அடிப்படை வசதி கூட இல்லாத ஏழைகளுக்கு உதவுவதே உண்மையான தர்மம்.
* எமன் நம் தலைமுடியை பிடித்திழுக்கிறான் என்பதை உணர்ந்து இன்றே தர்மம் செய்யுங்கள்.
* தேவைகளை குறைத்துக் கொண்டு முடிந்தளவு தர்மம் செய்யுங்கள்.
* பலனை எதிர்பார்க்காமல் செய்யும் தர்மத்தின் பலனை கடவுள் அளிப்பார்.
* புகழுக்காக சேவையில் ஈடுபடாதீர். இல்லாவிட்டால் அகந்தை வளரும்.
* தினமும் கையளவு புல்லாவது பசுவுக்கு கொடுக்க வேண்டும்.
* சேவை செய்பவர்கள் புன்சிரிப்பு, சாந்தம், தைரியம், ஊக்கமுடன் இருப்பது அவசியம்.
* பிறவியின் பயன் பிறரிடம் அன்பு செலுத்துவது மட்டுமே.
* வீடு சுத்தமாக இருந்தால் போதாது, மனமும் சுத்தமாக இருக்க வேண்டும்.
* வியாதிக்கு மருந்து மாதிரி பசிக்கு உணவு அளவாக இருக்க வேண்டும்.
* பசி போக்கத் தான் உணவே தவிர ருசியை அனுபவிக்க அல்ல.
* பிறரை தாக்குவதாக நினைத்தாலும் கோபம் நம்மையே அதிகம் தாக்குகிறது.
* பாவ சிந்தனைகளை அகற்ற புண்ணிய சிந்தனைகளை மனதில் உருவாக்க வேண்டும்.
* பித்ரு காரியங்களுக்கு சிரத்தையும், தெய்வ செயல்களுக்கு பக்தியும் அவசியம்.
* சுயநலத்தால் வரும் இன்பம் தற்காலிகமானது. பிறருக்கு கொடுத்து மகிழ்வதே பேரின்பம்.
விளக்குகிறார் காஞ்சி மகாபெரியவர்