
* பணமே பிரதானம். பணத்தால் தான் உலகமே இயங்குகிறது.
* கடவுள் அருள் இருந்தால் நினைத்தது நடக்கும்.
* நாக்கை பொறுத்தே ஒருவரின் வளர்ச்சியும், வீழ்ச்சியும் அமையும்.
* நன்றி மறந்தவர்கள் நரகத்திலிருந்து தப்ப முடியாது.
* பெரியவர்களின் கடுஞ்சொற்கள் அறிவை வளர்க்கும்.
* பெற்றோரை மதிப்பவர்களே நல்ல பிள்ளைகள்.
* இக்கட்டான நேரத்தில் உதவி கேட்கும் போதுதான் ஒருவரின் குணத்தை தீர்மானிக்க முடியும்.
* துன்பத்திற்கு மூலகாரணம் மனிதனின் முட்டாள்தனம்.
* நல்லவர்களின் நட்பால் வாழ்வு பிரகாசமாக அமையும்.
* புதிய விஷயத்தை கற்கும் போது கூச்சப்படக் கூடாது.
* இருப்பதைக் கொண்டு திருப்தியுடன் வாழ்ந்திடு.
* சாந்தமான மனம் இருந்தால் சந்தோஷம் தானாக வரும்.
* பிரச்னையில் உடனிருப்பவர்களே நல்ல உறவினர்கள்.
* துன்பத்தில் கை கொடுப்பவனே நல்ல நண்பன்.
* அரசன், ஆசிரியர், நண்பன், புத்திசாலி, மடையன் இவர்களோடு வாக்குவாதம் செய்யாதே.
சொல்கிறார் சாணக்கியர்