
* மனம் கடவுளிடம் ஒன்றி விட்டால் நினைத்தது கைகூடும்.
* கடவுள் எப்போதும் உன் அருகிலேயே இருக்கிறார்.
* துன்பம் என்பது கடவுள் உனக்கு அளிக்கும் வாய்ப்பு.
* நம்பிக்கையுடன் செயல்படு. முயற்சியில் வெற்றி பெறுவாய்.
* கடவுளிடம் உதவி கேள். நிச்சயம் அவர் செய்வார்.
* 'போதும்' என்ற மனதுடன் செயல்படு. மகிழ்ச்சியாக இருப்பாய்.
* பக்தி இருந்தால் முடியாததையும் முடிக்க முடியும்.
* கோபப்படாமல் பொறுமையுடன் செயல்படுவது பெண்களுக்கு அழகு.
* நல்ல செயலில் ஈடுபடு. பாவம் குறையும்.
* பிறர் மீது குற்றம் சொல்லாதே. மீறி சொன்னால் அதுவே இயல்பாகிவிடும்.
* நேரம் கிடைக்கும்போதெல்லாம் கடவுளின் நாமத்தை சொல்லு.
* முயற்சியும், உழைப்பும் இருந்தால் மட்டுமே வாழ்வில் உயர முடியும்.
* சோம்பல் இல்லாமல் சுறுசுறுப்புடன் செயல்படு. தீய எண்ணம் வராது.
* கடவுள் ஒருவர் மட்டுமே உண்மை.
* நல்ல மனதுடன் இரு. உலகமும் நல்லதாக தோன்றும்.
சொல்கிறார் சாரதாதேவியார்

