ADDED : மார் 12, 2020 02:47 PM

* பக்தி செலுத்துவதால் கடவுளுக்கு எந்த லாபமும் இல்லை; நமக்கு தான் லாபம்
* நல்லதை செய்தால் மகிழ்ச்சி நிலைக்கும்.
* வாழ்க்கைத்தரம் என்பது பொருள் சார்ந்தது அல்ல. அவரவர் மனதைப் பொறுத்தது.
* எந்த இடத்தில் நாம் இருந்தாலும் அங்கு மகிழ்ச்சியை உண்டாக்க வேண்டும்.
* கட்டுப்பாடு ஒன்றே மனதில் உள்ள அசுத்தங்களைப் போக்கும்.
* பேராசை கொண்டவர் யாரும் கடவுளின் அருளை பெற முடியாது.
* ஆடம்பர திருமணமும், வரதட்சணையும் ஒழிக்கப்பட வேண்டும்.
* இடைவிடாமல் மனம் எதை நினைக்கிறதோ அதை அடைந்தே தீரும்.
* பழைய பாவத்தை கழிப்பதைவிட புதிய பாவங்களைச் செய்யாமல் இருப்பது நல்லது.
* மனம் தெளிவு பெற அரை மணி நேரம் தினமும் தியானம் செய்யுங்கள்.
* வீடு சுத்தமாக இருந்தால் போதாது; மனம் துாய்மையானதாக இருக்க வேண்டும்.
* புத்தியை குடும்பத்தை கெடுத்து பேராபத்தில் குடி தள்ளிவிடும்.
* பிறர் மீது அன்பு செலுத்துவது மட்டுமே மனிதப்பிறவி எடுத்ததின் நோக்கம்.
* நாம் ஒவ்வொருவரும் தினமும் பசுவுக்கு ஒரு பிடி புல்லாவது கொடுக்க வேண்டும்.
* மனிதனை திருப்திபடுத்துவது அன்னதானம் மட்டுமே.
சொல்கிறார் காஞ்சிப்பெரியவர்