
* கடவுளே சிறந்த நண்பர். நம்மை எப்போது அடிக்க, அணைக்க வேண்டும் என்பதை அவர் மட்டுமே நன்கறிவார்.
* லட்சிய நோக்குடன் மனிதன் வாழ வேண்டும். எப்போதும் நற்பணிகளில் ஈடுபட வேண்டும் என்பதற்காகவே இந்த பிறவி வழங்கப்பட்டிருக்கிறது.
* நேர்மையும், உண்மையும் இருக்கும் வரை, செல்லும் வழியெல்லாம் கடவுள் துணைக்கு வருவதைக் கண்கூடாக காண்பீர்கள்.
* கடவுளின் அருளாட்சியில் தீமை கிடையாது. நலமோ அல்லது நலம் உண்டாக்கும் முயற்சியோ தான் எங்கும் நடந்து கொண்டிருக்கிறது.
* காலணி ஏதும் இல்லாமல் கடினமான முள் பாதையிலும் நடந்து செல்லும் சக்தி அன்பு என்னும் பாதத்திற்கு மட்டுமே இருக்கிறது.
* சோர்வு உங்களைச் சோர்வடையச் செய்து விடக் கூடாது. அதிலிருந்து விலகி அதன் காரணத்தைக் கண்டறியுங்கள். அதைப் போக்கும் முயற்சியில் இறங்குங்கள்.
* எல்லா உயிர்களுக்கும் தொண்டாற்றுங்கள். ஆனால் யாருடைய பாராட்டுக்கும் ஆசைப்படாமல் விழிப்புடன் இருங்கள்.
* பிடிக்காத விஷயத்தையும் பொறுமையுடன் கேளுங்கள். ஆராய்ந்து அதிலுள்ள உண்மையைக் கண்டுபிடியுங்கள்.
பதில் சொல்கிறார் அரவிந்தர்

