
* உள்ளத்தில் உருவாகும் ஒழுங்கற்ற எண்ணமே உண்மையான எதிரி.
* மனதை அடக்க நினைத்தால் அலையும். அறிய நினைத்தால் அடங்கும்.
* ஆசையை அடியோடு ஒழிக்கமால், சீரமைத்தாலே போதும்.
* எந்த சூழ்நிலையிலும் யாருக்கு கோபம் வராமல் இருக்கிறதோ, அவர் ஞானம் அடைந்து விட்டார் என அர்த்தம்.
* அறிவை உணர்ச்சி வெல்வது இயல்பு. அறிவால் உணர்ச்சியை வெல்வது தான் உயர்வு.
தீர்க்க முடியாத பிரச்னை எதுவுமில்லை. தீர்க்கும் வழியை அறிவது தான் எல்லோருக்கும் பிரச்னை.
* பகைமையை வைத்து கொண்டு வாழ்த்த முடியாது. வாழ்த்தும்போது பகைமை நிற்காது.
ஆராய்ச்சி இல்லாத நம்பிக்கை, தாழ்ப்பாள் இல்லாத கதவு போன்றது. லட்சியம் இல்லாத ஆராய்ச்சி, கதவு இல்லாத வீடு போன்றது.
* ஒவ்வொரு முறை வாழ்த்தும் போதும், நம்மை சுற்றி நல்ல அலைகள் உருவாகி கொண்டிருக்கும்.
* அனைத்து உயிரும் ஒன்று என்னும் எண்ணத்தில், செய்யும் எல்லா செயலும் அன்பின் செயலே.
சொல்கிறார் வேதாத்திரி மகரிஷி