ADDED : மே 02, 2023 03:08 PM
* தவறு செய்வது இயல்பு. ஆனால் அதைத் திருத்திக் கொள். வாழ்க்கையில் ஜெயிப்பாய்.
* அறிவுத் தேடலை ஒருபோதும் நிறுத்தாதே. தினமும் ஏதாவது ஒன்றை கற்றுக்கொள்.
* கோபத்திற்கு ஆளாகுபவர் தனக்குத் தானே தீ வைத்துக் கொள்கிறார்.
* பிறரது துன்பத்தைத் தீர்க்கும் வகையில் ஆறுதலாக பேசு. அதுவும் தர்மம்.
* உதவி செய்ய எவ்வளவு பேர் இருந்தாலும், உனக்கு சுயபுத்தி இருப்பது அவசியம்.
* ஆணும் பெண்ணும் குடும்பமாக இணைந்து வாழ்வதே சிறந்த வாழ்க்கை.
* ஒன்றை ஆக்குவதும் அழிப்பதும் உன் கையில் தான் உள்ளது.
* உண்மையான அன்பு கொண்டவன் யார் மீதும் கோபப்பட மாட்டான்.
* முதலில் உன்னை திருத்திக் கொள். பிறகு மற்றவர்களைத் திருத்தலாம்.
* சோம்பேறியாக இருப்பவன் தனக்கு மட்டுமில்லாமல், சமுதாயத்திற்கும் தீங்கு செய்கிறான்.
* மனஉறுதி, உழைப்பு, நாணயம் இருந்தால் தொழிலில் லாபம் பெருகும்.
* மனதில் ஆழ்ந்த யோசனை எழுந்து விட்டால், விரைவில் லட்சியத்தை அடைவாய்.
* மலர்ந்த முகமும், இனிய சொல்லும் தான் மகிழ்ச்சியாக இருப்பதற்கு வழி.
* கடவுள் நினைத்தால் எதுவும் கிடைக்கும். அதற்கு நிஜமான பக்தி வேண்டும்.
நம்பிக்கை தருகிறார் பாரதியார்

