* கோயில்களுக்கு உன்னால் இயன்ற உதவிகளை செய். புண்ணியம் சேரும்.
* கோயிலில் தரும் பிரசாதத்தை, 'வேண்டாம்' என சொல்லாதே. சிறிதளவாவது சாப்பிடு.
* பெருமாளின் திருவடிகளை பிடித்துக்கொள். நீ செய்த பாவம் தீரும்.
* மற்றவர்களின் கஷ்டத்தைப் போக்கும் செயல்களில் ஈடுபடு. அவர்கள் உன்னை வாழ்த்துவர்.
* பலனை எதிர்பார்த்து பிறருக்கு உதவி செய்யாதே.
* கோயிலின் கோபுரத்தை கண்டவுடன் கைகூப்பி வணங்கு.
* கடவுளை வணங்குவதை விட அவரது அடியார்களை வணங்குவது உயர்வானது.
* பெருமாள்தான் 'பரம்பொருள்' என்பதை அறிந்து, அவர் மீது பக்தி செலுத்து.
* 'ஓம் நமோ நாராயணாய' என்ற மந்திரத்தை தினமும் சொல்லு.
* கோயில் பிரகாரத்தை மெதுவாக வலம் வந்து பெருமாளை வணங்கு.
* புலனடக்கம் என்பது ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும்.
* கோயிலில் உள்ள மூர்த்திகள் கல், சுதை, ஐம்பொன்னால் ஆனது என்று எண்ணினால் கடவுள் தெரியமாட்டார்.
* ஆழ்வார்கள் அருளிய திவ்யப்பிரபந்தங்களை படி. நல்ல எண்ணம் உதிக்கும்.
* பிறரை குறை கூறுபவரிடம் பழகாதே. மீறி பழகினால் அவரது தீய குணம் உனக்கும் வந்துவிடும்.
வழிகாட்டுகிறார் ராமானுஜர்

