sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

நோய் தீர்க்கும் ஸ்தோத்திரம்

/

நோய் தீர்க்கும் ஸ்தோத்திரம்

நோய் தீர்க்கும் ஸ்தோத்திரம்

நோய் தீர்க்கும் ஸ்தோத்திரம்


ADDED : ஜூன் 17, 2011 08:58 AM

Google News

ADDED : ஜூன் 17, 2011 08:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மகாபாரதத்தில் விஷ்ணு சகஸ்ரநாம ஸ்தோத்திரம் இடம்பெற்றுள்ளது. இது பீஷ்மர் தர்மபுத்திரருக்கு உபதேசித்ததாகும். 150 ஸ்லோகங்களைக் கொண்ட இதில் விஷ்ணுவின் ஆயிரம் திருநாமங்கள் கூறப்பட்டுள்ளன. சிவன், ராமன், கிருஷ்ணர், லலிதாசகஸ்ர நாமங்கள் பல தெய்வங்களுக்கும் இருந்தாலும் விஷ்ணு சகஸ்ரநாமமே புகழ்பெற்றதாக விளங்குகிறது. இந்நூலுக்கு ஆதிசங்கரர், பராசரபட்டர், ராகவேந்திரர் மூவரும் அத்வைதம், விசிஷ்டாத்வைதம், துவைதம் ஆகிய மூன்று தத்துவங்களிலும் உரை எழுதியுள்ளனர். போருக்கு முன் கிருஷ்ணர் கீதையை அர்ஜுனனுக்கு உபதேசித்தார். போர் முடிந்த பிறகு தர்மருக்கு பீஷ்மர் சகஸ்ரநாமத்தை உபதேசிக்கிறார். அப்போது கிருஷ்ணரும் இந்த நாமத்தைக் கேட்டு மகிழ்கிறார்.

பகவானைக் காட்டிலும் அவருடைய திருநாமத்திற்கு மகத்துவம் அதிகம். ஏதாவது பலன் கருதி விஷ்ணுசகஸ்ர நாமத்தைப் பாராயணம் செய்பவர்கள் ஒரு மண்டலம் செய்வர். அரைமண்டலமாக 24நாட்களும், கால்மண்டலமாக 12 நாட்களும் பாராயணம் செய்யலாம். விஷ்ணுசகஸ்ரநாமம் பாராயணம் செய்தால் நோய்கள் நீங்கி உடல் பலம் பெறும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. துன்பத்திற்கு காரணமான முன்வினைப் பாவத்தைப் போக்குவதில் விஷ்ணுசகஸ்ரநாமம்ஈடுஇணையற்றதாகக் கருதப்படுகிறது.






      Dinamalar
      Follow us