நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீரங்கம் ரயில்வே ஸ்டேஷன் அருகில் உள்ள நந்தவனத்தின் நடுவே பழமையான வீடு இருக்கிறது. இந்த வீட்டிற்குள் அன்ன காமாட்சியம்மன் அருள்பாலிக்கிறாள். 200 ஆண்டுகளுக்கு முன், நவாப் ராஜமாணிக்கம் என்பவரிடம் தனக்கு சாதாரண வீடு போல கோவில் அமைக்க வேண்டும் என்று அம்பாள் கூறியதாகவும், அதன் காரணமாக இந்த கோவில் அமைக்கப்பட்டதாகவும் தலவரலாறு கூறுகிறது. செவ்வாய்க்கிழமை ராகுகாலத்தில் (மதியம் 3.004.30 மணிக்குள்) அம்பாளுக்கு விசேஷ அலங்காரம் செய்யப்படுகிறது. ஆடிமாத வெள்ளிக்கிழமைகளில் ஒவ்வொரு விதமான பாவாடை அலங்காரம் செய்யப்படுகிறது. முதல் வாரம் தாழம்பூ, 2வது வாரம் மரிக்கொழுந்து, 3வது வாரம் ரோஜா, 4வது வாரம் மல்லிகை, கடைசி வாரம் தங்கப்பாவாடை அலங்காரம் செய்யப்படுகிறது. இங்குள்ள நாகருக்கு ஆடி வெள்ளிக்கிழமையில் பாலபிஷேகம் செய்வதன் மூலம் ராகு, கேது தோஷம் நீங்கப் பெறலாம்.