ADDED : அக் 13, 2015 03:11 PM

கிராமத்து ஜனங்கள் பெரும்பாலும் அம்மன் கோவில்களுக்கு சென்று, குழந்தைகளுக்கு முதல் மொட்டை போடுவார்கள். கிருஷ்ணருக்கும், ஒரு அம்மன் கோவிலிலேயே முதல் முடி காணிக்கை அளித்துள்ளனர்.
குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் இருந்து 200 கி.மீ., தூரத்தில் மவுண்ட் அபு என்ற இடம் உள்ளது. இங்கிருந்து சிறிது தூரத்தில் உள்ள அரசூரில் 'அபு அம்பாஜி' கோவில் இருக்கிறது. குஜராத்தில் அம்மனை 'அம்பாஜி' என்பர். இங்கு அம்பாளுக்கு சிலை வடிக்காமல் யந்திரமாக ஸ்தாபித்துள்ளனர். இந்த யந்திரத்திற்கு வாரத்தின் ஏழு நாட்களும் ஏழு விதமான அலங்காரம் செய்யப்படும். இந்தக் கோவிலில் தான், கிருஷ்ணர் குழந்தையாக இருந்த போது, முதல் முடி காணிக்கை (க்ஷௌரம்) தரப்பட்டதாக சரஸ்வதி புராணம் என்ற நூலில் சொல்லப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல! ருக்மிணி தனக்கு நல்ல கணவன் வேண்டி இந்த அம்பாளை பூஜித்து, கிருஷ்ணரைக் கணவனாக அடைந்தாள் என 'ஆனந்த கர்ப்பம்' என்ற நூலில் தகவல் இருக்கிறது.

