நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றம் ஏந்தி குளிர்மழை காத்தவன்
அன்று ஞாலம் அளந்த பிரான்பரன்
சென்று சேர் திருவேங்கடமாமலை
ஒன்றுமே தொழ நம்வினை ஓயுமே.
கோவர்த்தன மலையைத் தாங்கி ஆயர்களையும், பசுக்களையும் மழையில் இருந்து காத்த கிருஷ்ணனே. மூன்று உலகங்களையும் திருவடியால் அளந்தவனே. பரம்பொருளான திருமாலே. திருவேங்கட மலையில் குடியிருப்பவரே. உன்னை வழிபட்டால் முன்வினை பாவம் நீங்கும்.