நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மகாவிஷ்ணு சூரியவம்சத்தில் ராமனாக அவதாரம் செய்ததால் 'ரவிகுல திலகன்' என அழைக்கப்பட்டார்.
சூரியனைப் போல தானும் பெருமை பெற வேண்டும் என சந்திரன் வேண்டினார். மனமிரங்கிய மகாவிஷ்ணு ''உன் பெயரை என்னோடு சேர்த்துக் கொள்கிறேன்'' என 'ராமச்சந்திரன்' என தன் பெயரை மாற்றிக் கொண்டார். அத்துடன் அடுத்த அவதாரத்தில் சந்திர வம்சத்தில் அவதரிப்பதாகவும் வாக்கு கொடுத்தார். இதனடிப்படையில் கிருஷ்ணஜெயந்தி நாளில் பூஜை முடித்து நிலாவை பார்த்தால் மகிழ்ச்சி நிலைக்கும்.