நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூஜை செய்யும் போது உதிரிப்பூக்களை சுவாமியின் பாதத்தில் இட்டு அர்ச்சனை செய்ய வேண்டும். அப்போது அஷ்டோத்திர நாமம்(108) அல்லது சகஸ்ர நாமம்(1008) சொல்வது சிறப்பு. பூக்களை கையில் எடுக்கும் போது கட்டை விரல், நடுவிரல், மோதிர விரல்களை மட்டும் பயன்படுத்த வேண்டும். ஆள்காட்டி விரல், சுண்டுவிரல் நீட்டிய நிலையில் இருக்க வேண்டும். பழைய பூக்களை அகற்றும் போது ஆள்காட்டி, கட்டை விரலை பயன்படுத்த வேண்டும்.