sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

தங்கக்காசு

/

தங்கக்காசு

தங்கக்காசு

தங்கக்காசு


ADDED : செப் 01, 2024 12:26 PM

Google News

ADDED : செப் 01, 2024 12:26 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம் கோயிலுக்குச் சென்ற ஏழை புலவர் ஒருவர், ''சிதம்பரம் பொற்சபையில் ஆடும் நடராஜனே! மெல்லிய ஆடை குளிரைத் தாங்குமோ? தாங்காது. சந்தையில் செல்லாத காசும் செல்லுமோ? செல்லாது. அதுபோல மூர்க்க குணம் கொண்டவர்களுக்கு நல்லதைச் சொன்னாலும் புத்தி வருவதில்லை'' எனக் குறையை வெளிப்படுத்தினார்.

அடுத்ததாக அம்மன் சன்னதிக்குச் சென்றார். '' சிவகாமித்தாயே! உன் மகன் முருகனுக்கு வேல் கொடுத்தாய். மணநாளன்று அம்மி மிதிக்க உன் மணவாளருக்கு கால் கொடுத்தாய். திருஞான சம்பந்தருக்கு பால் கொடுத்தாய்.

உலகையே ஆட்டிப் படைக்கும் மன்மதனுக்கு செங்கோல் கொடுத்தாய். இத்தனையும் கொடுத்த நீ எனக்கு ஏதும் தரவில்லையே!'' என வருத்தமுடன் பாடினார்.

உடனே அங்கிருந்த பஞ்சாட்சர படிகளில் புலவருக்கு ஐந்து தங்கக்காசுகளை வைத்து மறைந்தாள். இதன்பின் அவருக்கு 'படிக்காசு புலவர்' எனப் பெயர் ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us