
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முருகனின் பெற்றோர் சிவபார்வதி. சிவம் என்பதற்கு 'மங்களம்' என பொருள். பார்வதிக்கு 'மங்களாம்பிகை' என்றும் பெயருண்டு. 'சர்வ மங்கள மாங்கல்யே சிவே' என்னும் ஸ்லோகம் தேவியின் மங்களத் தன்மையை சிறப்பிக்கிறது.
இவர்களின் மகனான முருகனும் மங்களத்தன்மை மிக்கவர் என்பதால், மங்களவார் எனப்படும் செவ்வாயன்று வழிபடுகிறோம். நவக்கிரகங்களில் ஒருவரான செவ்வாய்க்கு 'மங்களன்' என்றும் பெயருண்டு. செவ்வாயன்று முருகனை வழிபட்டால் சகோதர ஒற்றுமை பெருகும். திருமணம் தடையின்றி நடக்கும்.