திருப்பதியில் பெருமாள் ஐந்து நிலைகளில் காட்சியளிக்கிறார். மூலவர், மலையப்பர், உக்ர சீனிவாசர், போக சீனிவாசர், கொலுவு சீனிவாசர் என்னும் இவர்களை 'பஞ்ச பேரர்கள்' என்பர்.
* மூலவர் கருவறையில் நின்ற கோலத்தில் சங்கு சக்கரம் ஏந்திய நிலையில் இருக்கிறார். இவரே இக்கோயிலின் பிரதான மூர்த்தி.
* உற்ஸவர்: ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளும் இவரை மலையப்பர் என அழைப்பர். தினமும் கல்யாண கோலத்தில் காட்சி தரும் இவருக்கு 'மலைக்கினிய பெருமாள்' என்றும் பெயருண்டு.
* உக்ர சீனிவாசர்: ஆண்டுக்கொரு முறை கார்த்திகை துவாதசியன்று மட்டும் அதிகாலையில் பவனி வருவார். இவரை மற்ற நாளில் தரிசிக்க முடியாது.
* போக சீனிவாசர்: வெள்ளியால் செய்யப்பட்டவர். அபிஷேகத்தின் போது எழுந்தருள்வார்.
* கொலுவு சீனிவாசர்: கோயிலில் நடக்கும் அன்றாட வரவு, செலவு கணக்கை அதிகாரிகள் சமர்ப்பிக்கும் போது எழுந்தருள்பவர்.