நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள பிரம்ம தீர்த்தக் கரையில் காலபைரவர் சன்னதி உள்ளது. இவரது சிலை ஆறடி உயரத்தில் ஒரே கல்லால் ஆனது. எட்டு கைகளில் ஆயுதங்களை ஏந்தி கபால மாலையை அணிந்தபடி இருக்கிறார்.
தலையில் மூன்றாம் பிறையைச் சூடிய இவரை திருஷ்டி தோஷம், எதிரி தொல்லை தீர வழிபடுகின்றனர். இவருக்கு தேய்பிறை அஷ்டமி, ஞாயிறன்று ராகு காலத்தில் வழிபாடு நடக்கிறது.