ADDED : பிப் 27, 2025 03:07 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மனிதனாக பிறந்தவன் 'பஞ்ச மகாயக்ஞம்' என்னும் ஐந்து உயர்ந்த செயல்களைச் செய்ய வேண்டும்.
பிரம்ம யக்ஞம்: வேதத்தைக் கற்றல், மற்றவருக்கும் கற்பித்தல்.
பிதுர் யக்ஞம்: எள், தண்ணீரால் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து அன்னம் படைத்து வணங்குதல்.
பூத யக்ஞம்: பிராணிகளுக்கு உணவளித்தல்.
நர யக்ஞம்: வீட்டிற்கு வரும் விருந்தினரை உபசரித்தல்.
தேவ யக்ஞம்: தெய்வங்களுக்கும், தேவர்களுக்கும் யாகம் செய்து வழிபடுதல்.
இதில் தேவ யக்ஞத்திற்கே அதிகம் செலவாகும். மற்றவை குறைந்த செலவுடையவை. முடிந்ததை செய்தால் புண்ணியம் உங்களுக்கே.