
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நகை, பணம் போன்ற முக்கிய பொருட்களை எங்காவது வைத்து விட்டு நாம் தேடுவது உண்டு. காவல் தெய்வமான அரைக்காசு அம்மனை வழிபட்டால் தொலைந்த பொருள் கிடைக்கும்.
அரைக்காசு அம்மன் படத்தின் முன் வெல்லம், பொரிகடலை கலந்த கலவையை வைத்து, ''அரைக்காசம்மா... பொருளைக் கண்ணில் காட்டம்மா!'' என வேண்டிக் கொள்ளுங்கள்.பொருள் கிடைத்து விடும். வீட்டில் அரைக்காசு அம்மன் படம் இல்லாவிட்டால் தலைவாசல் நிலைப்படியை சுத்தம் செய்து, அங்கு வெல்லம், பொரிகடலையை வைத்து வழிபடலாம். இந்த பிரசாதத்தை முதலில் குழந்தைகளுக்கு கொடுப்பது அவசியம்.