
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் பஞ்சபூதங்களாக இருப்பவர் சிவபெருமானே. சிதம்பரத்தை ஆகாயத் தலமாக குறிப்பிடுவர். இங்குள்ள பொற்சபையில் அண்ணாந்து பார்த்தால் வெட்ட வெளி தெரியும். பரந்த ஆகாயத்தின் எல்லையைத் தொட்டவர்கள் யாருமில்லை. அதுபோல கடவுளும் எல்லையற்றவர். யாராலும் அறியப்படாத ரகசியமாக அவர் இருக்கிறார். இதை 'சிதம்பர ரகசியம்' என்பர்.
சிவன் காற்று வடிவாக காளஹஸ்தியிலும், நீர் வடிவாக திருவானைக்காவலிலும் (திருச்சி), நெருப்பு வடிவாக திருவண்ணாமலையிலும், நிலத்தின் வடிவாக திருவாரூர், காஞ்சிபுரத்திலும் அருள்புரிகிறார்.