நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தெய்வீக சக்தி குடியிருக்கும் மனதை 'ஸுமநஸ்' என்பர். இதற்கு 'நல்ல மனசு' என்பது பொருள்.
மலருக்கும் 'ஸுமநஸ்' எனப் பெயருண்டு. செடி, கொடிகளும் தம் மனதைப் பிரதிபலிப்பது போல பூக்களை மலரச் செய்வதால் இப்பெயர் வந்தது. மலரில் தேன் சுரப்பது போல நல்ல மனதில் அன்புத்தேன் சுரக்கும். மனம் என்னும் மலரால் விநாயகரை வழிபடுவோர் அடையும் நன்மைகளை பட்டியல் இடுகிறார் அவ்வைப்பாட்டி.
வாக்கு வன்மை, நல்ல எண்ணம் உண்டாகும். தாமரை மலரில் வாழும் மகாலட்சுமியின் அருள் சேரும். உடல்நலத்திற்கு குறைவு வராது. மலருக்கும், பிரம்மா உள்ளிட்ட வானுலக தேவர்களும் செயலைத் தொடங்கும் முன் வெள்ளை மனம் கொண்ட விநாயகரின் திருவடியை வழிபடுகின்றனர்.

