
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழ் புலவரான ஒட்டக்கூத்தர். நாமகளின் அருளால் பாடும் திறம் பெற எண்ணினார். இதற்காக ஹரிநாதேஸ்வரம் என்னும் கூத்தனுாரில் ஓடும் அரசலாற்றில் நீராடி கலைவாணியை
வழிபட்டு தியானத்தில் ஆழ்ந்தார்.
கலைவாணி அவர் முன் தோன்றி தன் வாயிலிருந்த தாம்பூலத்தை (வெற்றிலை) கொடுத்தாள். இதனால் பேரறிவும், ஞானமும் பெற்றார் ஒட்டக்கூத்தர். கூத்தருக்கு கலைமகள்
காட்சி கொடுத்து அருளிய தலம் என்பதால் கூத்தனுார் என இத்தலத்திற்கு பெயர் வந்தது.
தக்கயாகப்பரணி என்னும் நுாலில் சரஸ்வதியை,
'ஆற்றங்கரை சொற்கிழத்தி வாழியே' என பாடியிருப்பது இவரின் பக்தியை காட்டுகிறது. 'கிழத்தி' என்பதற்கு 'தலைவி'
என பொருள். சொல்லுக்கு (வாக்கு) தலைவி என்பதால் இப்பெயரால் ஒட்டக்கூத்தர் அழைக்கிறார்.