
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருள்வித்தகர் என்னும் அந்தணர் பூக்கூடையுடன் காவிரியாற்றின் குறுக்கே சென்று கொண்டிருந்தார். அப்போது ஆற்றில் வெள்ளம் அதிகரித்தது.
அப்போது துறவி வடிவில் தோன்றிய சிவன் படித்துறைக்குச் செல்ல வழிகாட்டி, அந்தணரை கரையேறச் செய்தார். இதன் அடிப்படையில் எழுந்த சிவன் கோயில் மயிலாடுதுறை - சிதம்பரம் சாலையிலுள்ள விளநகர் என்னும் இடத்தில் உள்ளது. சுவாமிக்கு 'துறை காட்டும் வள்ளல்' என்பது திருநாமம். அம்மனின் பெயர் வேயுறு தோளியம்மை. மூங்கில் போல வளைந்த தோள்களை கொண்டவள் என்பது பொருள்.