ADDED : ஜன 12, 2024 04:36 PM
அ நிறம் | அளவு
விநாயகர், முருகப்பெருமான், வீரபத்திரர், பைரவர் என்னும் நால்வரை சிவகுமாரர்கள்
என்பர். இவர்களில் வீரபத்திரர்களுக்கான விரதவழிபாடு தை மாதத்தில் வரும் செவ்வாய் அன்று தொடங்கப்படும். அன்று தொடங்கி அடுத்த ஆண்டு தை செவ்வாயில் நிறைவு செய்வர். அவ்வாறு செய்ய முடியாதவர்கள் தை மாத செவ்வாயில் மட்டும் விரதம் அனுஷ்டிக்கலாம். இவ்வழிபாட்டை மேற்கொள்வது தடை நீக்கும். பகையைத் தீர்க்கும். நவக்கிரக பாதிப்பு குறையும்.
