நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமன் என்றாலே ஆனந்தமாக இருப்பவன் என்றும், பிறருக்கு ஆனந்தத்தைத் தருபவன் என்றும் பொருள்.
எத்தனை துன்பம் வந்தாலும் மனம் வருந்தாமல் தர்மத்தையே அனுசரித்தவர். இவ்வாறு தர்மப்படி வாழ ஆரம்பித்தால் தானாகவே மனதின் சஞ்சலம் குறைந்து தெளிந்துவிடும். இந்த தெளிவு மோட்சத்திற்கு கொண்டுபோய் சேர்க்கும். இதை நமக்கு உணர்த்தவே நாராயணனே பூமியில் ராமராக வந்து அவதரித்தார்.
அதிலும் ராமர் பேசும் போது 'இது என் கருத்து' என்று தன்னை முன்னிலைப்படுத்த மாட்டார். 'ரிஷிகள் இப்படிச் சொல்கிறார்கள்; சாஸ்திரம் இப்படிச் சொல்கிறது' என்று அடக்கமாக சொல்வார். இப்படி சகல வேதங்களுக்கு தலைவராக இருப்பவரே அதற்கு கட்டுப்பட்டு வாழ்ந்துள்ளார்.