ADDED : பிப் 02, 2024 01:51 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முருக பக்தரான பாம்பன் சுவாமிகள் உடல்நலக் குறைவாக இருந்தார்.
அவர் உணவில் உப்பு சேர்க்க மாட்டார் என்பதை அறிந்த மருத்துவர்கள், உப்புச்சத்து குறைபாடு இருப்பதால் குணமாகும் வாய்ப்பு கிடையாது எனத் தெரிவித்தனர்.
படுக்கையில் கிடந்த சுவாமிகள், “முருகா! உப்பை நம்பவில்லை. உன்னையே நம்புகிறேன்” என்று சொல்லி சண்முக கவசத்தை பாடி வந்தார்.
நாளடைவில் மருத்துவர்கள் வியக்கும் விதத்தில் குணமடைந்தார். 'எந்த கடவுளும் கந்தக் கடவுளுக்கு மிஞ்சாது' என்னும் சுவாமிகளின் வாக்கு உண்மையானது.