ADDED : பிப் 23, 2024 11:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* புனித நதிகளில் நீராடுவோர் ஒற்றை ஆடை உடுத்தியோ, இரவிலோ நீராடக் கூடாது.
* வடக்கு அல்லது கிழக்கு நோக்கி நின்று மூன்று முறை சிறிது நீரை உள்ளங்கையில் எடுத்து தலை மீது தெளிக்க வேண்டும்.
* புண்ணிய நதி, கடலில் நீராடுவோருக்கு சிவன், மகாவிஷ்ணு அருளால் பாவம் நீங்கும்.
* தீர்த்தங்களில் மூன்று முறை மூழ்கி எழுவது நல்லது. முதல் முறையால் பாவம் தீரும். இரண்டாம் முறையால் சொர்க்க வாழ்வு அமையும். மூன்றாம் முறையால் புண்ணியம் பெருகும்.
* நீராடியதும் அம்பிகையை வழிபட்டு குங்குமத்தால் அர்ச்சனை செய்ய இன்பவாழ்வு அமையும்.