sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

வருகவே... வருக!

/

வருகவே... வருக!

வருகவே... வருக!

வருகவே... வருக!


ADDED : மார் 15, 2024 11:47 AM

Google News

ADDED : மார் 15, 2024 11:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனே வருக சீராசைத்

திருவே வருக திரிநேத்திர

சிவசங்கரருக்கு உவகை நல்கும்

செல்வக்கனியே வருக விண்ணின்

ஆனே பரவத் தவம்புரியும்

அமுதே வருக குமுதவாய்

அனமே வருக வினை இருளை

அவிக்கும் கிரணக் கதிர் வருக

பால் நேர் மொழிப் பார்வதி வருக

பனி மாமலையின் சேய் வருக

பன்னாகங்கள் இரண்டும் வழிபாடு

புரியும் புன்னை வன

மானே வருக உயிர் அனைத்தும்

வளர்க்கும் அனையே வருகவே

மன்றல் கமழு மலர்க் குழல்

கோமதியே வருக வருகவே..

எந்தச் செயலைத் தொடங்கினாலும் நாக தோஷத்தால் தடைகள் ஏற்படுகிறதே என வருத்தப்படுவரா நீங்கள்.... அப்படியானால் தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் கோமதியம்மனை சரணடையுங்கள். கோமதி' என ஒருமுறை அழைத்தாலும் போதும். குறையனைத்தும் தீரும்.

இத்தலத்தில் சங்கன், பதுமன் என்னும் நாக அரசர்கள் வழிபட்டு சங்கர நாராயணரை தரிசிக்கும் பேறு பெற்றனர். தூய சிநதனையுடன் இருப்பிடத்தில் இருந்து இக்கோயிலை மனதால் நினைத்தாலும் நாகதோஷம் மறையும்.

இத்தலத்திற்கு அருகிலுள்ள ஊற்றுமலை ஜமீனிடம் புலவராக இருந்தவர் புளியங்குடி முத்தவீரப்பக் கவிராயர். சீவல மாற பாண்டியன் என்னும் மன்னரால் இயற்றப்பட்டு முழுமை பெறாமல் இருந்த கோயில் புராணத்தை கவிராயரே பாடி முடித்தார்.

கோமதியம்மனை தரிசித்த பின், எந்த மனிதரையும் பார்க்க மாட்டேன்' என வரம் பெற்றார். இதனால் இமைகள் வேகமாக வளரவே இவரது கண்கள் மூடிக் கொண்டன. இவர் இயற்றிய கோமதியம்பிகை பிள்ளைத்தமிழ்' பாடலை பாடினால் விருப்பம் நிறைவேறும்.






      Dinamalar
      Follow us