நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் காக்க, கோதண்டம் என்னும் வில்லுடன் ஓடி வருவார் அவர். இப்படிப்பட்ட பலசாலியான அவரே சீதையைப் பிரிந்த நேரத்தில் செய்வதறியாமல் கலங்கினார். அப்போது ராமருக்கு மனபலம் தந்த பெருமை அனுமனையே சேரும்.
ராவணனால் கடத்தப்பட்ட சீதை இலங்கையில் இருப்பதை அறிந்து அவளை மீட்க உதவினார். பலம் மிக்க ராமனுக்கே, பக்கபலமாக இருந்த அனுமனைச் சரணடைந்தால், நமது வாழ்வில் எப்போதும் வெற்றியே.