
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சீதையைத் தேடி அலைந்த ராமர், லட்சுமணர் காட்டில் இருந்த மதங்க மகரிஷியின் ஆஸ்ரமத்திற்கு வந்தனர். அங்கு மதங்கரின் சிஷ்யையான சபரி பாட்டியைக் கண்டனர். அவள் தன் குருநாதரின் அறிவுரைப்படி 12 ஆண்டுகளாக ராம தரிசனம் பெறக் காத்திருந்தாள். காட்டில் சேகரித்த இலந்தைப் பழம், தேன், கிழங்குகளை உண்ணக் கொடுத்தாள்.
அவளது அன்பைக் கண்ட ராமருக்கு கண்ணீர் வந்தது. “ஐயனே! இன்று உங்களை தரிசிக்கும் பேறு பெற்றேன். உங்களைக் காண்பதற்காக இவ்வளவு காலம் என் உயிரைத் தாங்கியிருந்தேன். பிறவிப்பயனை இன்று அடைந்தேன்” என வணங்கினாள். ஜோதி வடிவில் அவளது உயிர் விண்ணுலகம் சென்றது.