ADDED : ஜூன் 14, 2024 12:54 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை அருகிலுள்ள இலம்பையங் கோட்டூரில் சந்திர சேகரேஸ்வரர் கோயில் உள்ளது. தற்போது இத்தலம் 'எலுமினியன் கோட்டூர்' எனப்படுகிறது.
தேவலோக பெண்ணான ரம்பா வழிபாடு செய்த சிவன் சுயம்புமூர்த்தியாக இங்குள்ளார். இங்குள்ள தட்சிணாமூர்த்தி வலது கையால் சின்முத்திரை காட்டியபடி கையை மார்பில் வைத்திருக்கிறார்.
இவரது கைகளில் சூலம், ருத்ராட்ச மாலை உள்ளது. இவரை மூன்று வியாழன் தரிசித்தால் கல்வி வளர்ச்சி ஏற்படும். இக்கோயிலை 21 முறை வலம் வந்தால் விருப்பம் நிறைவேறும்.