ADDED : ஜூன் 14, 2024 12:58 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மகாவிஷ்ணு தர்மத்தை நிலைநாட்ட மச்சம், கூர்மம், வராகம், வாமனம், நரசிம்மம், பரசுராமர், ராமர், கிருஷ்ணர், பலராமர், கல்கி அவதாரங்களை எடுத்தார்.
முதல் ஐந்து அவதாரங்களை கிருத யுகத்திலும், ராம, பரசுராம அவதாரங்களை திரேதா யுகத்திலும் எடுத்தார்.
துவாபர யுகத்தில் கிருஷ்ணர், பலராமராக வந்தார். கலியுகத்தின் முடிவில் கல்கி அவதாரம் எடுக்க இருக்கிறார். இதில் நரசிம்மர், ராமர், கிருஷ்ணர் ஆகிய மூன்று மட்டுமே முழுமையான அவதாரங்கள் என்பதால் 'பூர்ண அவதாரங்கள்' என்பர்.
அதிலும் கிருஷ்ண அவதாரத்தை 'சர்க்கரை பந்தலில் தேன்மழை' என பெருமையாகச் சொல்வர்.