sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

இழந்த பதவிக்கு...

/

இழந்த பதவிக்கு...

இழந்த பதவிக்கு...

இழந்த பதவிக்கு...


ADDED : ஜூன் 21, 2024 02:12 PM

Google News

ADDED : ஜூன் 21, 2024 02:12 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மார்க்கண்டேயனின் ஆயுளை முடிக்கச் சென்ற எமன், ஆணவத்தால் சிவலிங்கத்தின் மீது பாசக்கயிற்றை வீசினான். இதனால் எமனின் பதவியை பறித்ததோடு பூலோகத்தில் மனிதனாக திரிய சாபமிட்டார். விமோசனம் பெறுவதற்காக சிவபூஜை செய்ய விரும்பினான். அதற்காக ஓரிடத்தில் தோண்டவே நுரை பொங்கியது.

மணலையும், நுரையையும் சேர்த்து சிவலிங்கம் செய்து பிரதிஷ்டை செய்தான். அவனுக்கு காட்சியளித்த சிவன் மீண்டும் பதவியை கொடுத்தார். காலனுக்கு (எமன்) பதவி அளித்தவர் என்பதால் சுவாமி 'காலகாலேஸ்வரர்' எனப்பட்டார்.

கோயில்பாளையம் என்னும் இத்தலம் கோயம்புத்துார் - சத்தியமங்கலம் சாலையில் 20 கி.மீ., துாரத்தில் உள்ளது. ஆயுள் நீடிக்கவும், இழந்த பணியைப் பெறவும் இங்கு வழிபடுகின்றனர். மணல் லிங்கம் என்பதால் சுவாமிக்கு அபிஷேகம் கிடையாது. இங்குள்ள வில்வ மரத்தில் காய்க்கும் காய்கள் உருண்டையாக இல்லாமல் லிங்க வடிவில் இருக்கும்.






      Dinamalar
      Follow us