
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கங்கைக் கரையில் உள்ள புண்ணிய தலங்களில் சிறப்பானவை காசி, பிரயாக்ராஜ், ஹரித்துவார்.
இதில் யமுனை நதியோடு கங்கை கலக்கும் இடம் பிரயாக்ராஜ். இதன் அருகில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்றும் சேரும் 'திரிவேணி சங்கமம்' புனித தீர்த்தமாக விளங்குகிறது. இதை 'தீர்த்தங்களின் ராஜா' என்பர். இங்கு வெண்ணிற கங்கையும், கருமை நிற யமுனையும் கலப்பதைக் காணலாம்.
'மாயனை மன்னு வடமதுரை மைந்தனை துாயபெருநீர் யமுனைத் துறைவனை' என கண்ணனின் சிறப்பை யமுனையுடன் சேர்த்து சொல்கிறாள் ஆண்டாள். யமுனைக் கரையில் அமர்ந்து காயத்ரி மந்திரம் ஜபிப்பது சிறப்பு. இங்கு 'அந்தர்வாகினி'யாக (கண்ணுக்கு தெரியாமல்) சரஸ்வதி நதி ஓடுகிறது.