sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

நற்றுணையாவது நமச்சிவாயவே

/

நற்றுணையாவது நமச்சிவாயவே

நற்றுணையாவது நமச்சிவாயவே

நற்றுணையாவது நமச்சிவாயவே


ADDED : பிப் 01, 2021 07:13 PM

Google News

ADDED : பிப் 01, 2021 07:13 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாயன்மார்களில் எண்பது ஆண்டுகள் வாழ்ந்தவர் திருநாவுக்கரசர். இவரது இயற்பெயர் மருள்நீக்கியார். கடலுார் அருகிலுள்ள வீராட்டானத்துறையில் கோயில் கொண்டிருக்கும் சிவன் அருளால் வயிற்று நோய் நீங்கப் பெற்றார். சிவன் கோயில்கள் எங்கும் தரிசித்து தேவாரப் பாடல்கள் பாடினார். இதை விரும்பாத மகேந்திர பல்லவ மன்னன், சுண்ணாம்புக் காளவாசலில் இட்டும், விஷ உணவு கொடுத்தும், யானையின் காலால் இடறச் செய்தும் துன்புறுத்தினான். ஆனால் சிவனருளால் திருநாவுக்கரசர் உயிர் தப்பினார். கடைசியாக அவரை கல்லில் கட்டி கடலில் வீச ஆணையிட்டான். மனம் கலங்காத நாவுக்கரசர் “கற்றுணை பூட்டியோர் கடலில் பாய்ச்சினும் நற்றுணையாவது நமச்சிவாயவே,” என்று வீரத்துடன் பாடினார். கல்லே தோணியாக மாறி திருநாவுக்கரசரை தாங்கி நின்று மிதந்தது. நாவுக்கரசர் கரையேறினார். ஆச்சரியமடைந்த மன்னன், மனம் மாறி சிவனடியவராக மாறினான்.






      Dinamalar
      Follow us