ADDED : ஜூலை 31, 2021 03:25 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரங்கநாதரின் தங்கையாக காவிரி கருதப்படுகிறாள். இந்நாளில் திருச்சி சமயபுரம் பகுதியே விசேஷமாக இருக்கும். திருமணமான பெண்களை தாய்வீட்டிற்கு அழைத்து சகோதரர்கள் ஆடிச்சீர் கொடுப்பர். ஆதிமாரியம்மன் கோயிலுக்கு (சமயபுரத்தில் இருந்து 6 கி.மீ.,) அழைத்துச் செல்வர். இவள் சமயபுரம் மாரியம்மனின் சகோதரியாக கருதப்படுகிறாள். நாமே ஆடிச்சீர் கொடுக்கும் போது திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சும்மா இருப்பாரா! அவரும் காவிரிக்கு சீர் கொடுக்க அம்மா மண்டப படித்துறைக்கு எழுந்தருள்வார். அங்குள்ள மண்டபத்தில் சுவாமிக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்) நடக்கும். மாலை வரை அங்கேயே ஆஸ்தானத்தில் வீற்றிருப்பார். சீதனப்பொருட்களாக பட்டு, தாலிப்பொட்டு, மஞ்சள் உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் ரங்கநாதர் சார்பாக காவிரியில் மிதக்க விட்டு வழிபடுவர்.